2014 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
கணிப்பு
ஜோதிட மாமணி
முருகு பாலமுருகன் M.A.astro.
வடபழனி,சென்னை-600026.
ஜோதிட மாமணி
முருகு பாலமுருகன் M.A.astro.
வடபழனி,சென்னை-600026.
மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
புத்தாண்டு பலன் 2014 மேஷம்
மேஷம் (அஸ்வினி, பரணி,கிருத்திகை & 1ம் பாதம்)
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே ! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆண்டு உங்களுக்கு சற்று பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். உங்கள் ஜென்ம ராசியில் கேதுவும், 7இல் சனி & ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் போன்றவை உண்டாகும். தற்போது ஜென்ம ராசிக்கு 3இல் சஞ்சரிக்கும் குரு பகவான் வரும் 13.6.2014 முதல் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களாலும் வீண் செலவுகள் ஏற்படும். 21.6.2014இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 6ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது மூலம் எதையும் எதிர் கொண்டு வெற்றிப்பெறக்கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் கடனில்லாத கண்ணியமான வாழ்க்கையை வாழ்வீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஒரளவுக்கு அனுகூலப்பலன்களை அடைய முடியும். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் உங்களுக்கு அஷ்டம சனி தொடங்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்வது நல்லது.
தேக ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்ட படியே இருக்கும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்பட முடியாத அளவிற்கு மனக்குழப்பங்களும், நிம்மதி குறைவும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைக்க முடியும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் கணவன்&மனைவியிடையே சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுப காரியம் நடைபெறுவதில் தடைகள் உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து நடப்பதின் மூலம் பல நல்ல காரியங்களை சாதித்து கொள்ள முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள்.
கொடுக்கல் வாங்கல்
பண வரவுகள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு திருப்திகரமாக இருக்காது என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல் படுவது நல்லது. பண விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேர்ந்தாலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாகத் தானிருக்கும்
.
தொழில் வியாபாரிகளுக்கு
கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகள் போட்டி பொறாமைகளால் கை நழுவிப் போகும். கூட்டாளிகளிடமும் தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்து செல்வதும் தட்டி கொடுத்து வேலை வாங்குவதும் நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெறுவீர்கள். எதிலும் எதிர் நீச்சல் போட்டாலும் முன்னேறி விடக் கூடிய ஆற்றல் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் சற்று கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து விடுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு எதிர் பார்த்த அளவிற்கு தகுதிக்கேற்ற வேலை கிடைக்காவிட்டாலும், கிடைப்பதை பயன் படுத்திக் கொள்வது நல்லது. யாருடைய விஷயங்களிலும் தலையீடு செய்யாமலிருப்பதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அரசியல்வாதிகளுக்கு
மேடை பேச்சுக்களில் கவனமுடன் செயல் படுவது. தேவையற்ற வாக்குறுதிகளை வழங்காதிருப்பது நல்லது. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய சற்று கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் சொன்னதை செய்து முடிப்பீர்கள். கட்சி பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டி வரும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். புழு, பூச்சிகளின் தொல்லைகளும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர் பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பூமி மனை வாங்கும் விஷயங்களில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். முடிந்த வரை தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதிருப்பது நல்லது.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் நடந்து கொண்டால் அன்றாட பணிகளில் சுறு சுறுப்புடன் செயல் முடியும். பண வரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமையுடன் செயல்படுவீர்கள். முடிந்த வரை குடும்ப பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதிருப்பது மிகவும் நல்லது.
படிப்பு
கல்வியில் சற்று கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். பயணங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது, தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். அரசு வழியில் ஒரளவுக்கு உதவிகள் கிட்டும்.
ஸ்பெகுலேஷன்
லாட்டரி, ரேஸ், ஷேர், போன்றவற்றில் பெரிய தொகைளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது.
ஜனவரி
ஜென்ம ராசியில் கேதுவும், 7&ஆம் வீட்டில் சனி ராகுவும் சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் 6&ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 10&இல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். 3&இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெற கூடிய வாய்ப்புகளும் கை கூடும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. தினமும் விநாயகப் பெருமானை வழிபடவது நல்லது.
சந்திராஷ்டமம் ; 25.01.2014 மாலை 6.00 மணி முதல் 27.1.2014 இரவு 09.32 மணி வரை
பிப்ரவரி
நிமிர்ந்த நடையும், கனிந்த பார்வையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதாலும் 10&இல் சூரியனும் புதனும் சஞ்சாரம் செய்வதாலும் இம்மாதம் தொழில் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். பண வரவுகள் திருப்திகரமாக இருப்பதால் குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது, உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிட்டும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 22.02.2014 அதிகாலை 01.53 மணி முதல் 24.02.2014 காலை 05.33 மணி வரை.
மார்ச்
எதையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் குருவும், 7&இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளும், எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் உண்டாகும் என்றாலும், 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் சஞ்கரிப்பதால் எதிர்பார்க்கும் லாபங்கள் தடையின்றி கிடைக்கும். பண வரவுகள் ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகளை சமாளிக்கும் அளவிற்கு ஆற்றல் உண்டாகும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 21.03.2014 காலை 09.38 மணி முதல் 23.03.2014 மதியம் 01.27 மணி வரை
ஏப்ரல்
நிறைய பொது அறிவும், பரந்த மனப்பான்மையும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசியில் கேதுவும் 12&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. 6&இல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், 7&இல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியிலிருப்பதாலும் உங்களுக்குள்ள பிரச்சனைகள் எதிர்ப்புகள் யாவும் விலகி குடும்பத்தில் முன்னேற்றமான நிலையினைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும், பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 17.04.2014 மாலை 05.22 மணி முதல் 19.04.2014 இரவு 09.21 மணி வரை.
மே
தன்னை நம்பியவர்களை எந்த துன்பத்திலிருந்தும் காப்பாற்றக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6&ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் 7&இல் உள்ள சனி வக்ர கதியிலிருப்பதாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றலும், உங்களின் பலம், வலிமையும் கூடும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உறவினர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படுவர்கள். கூட்டாளிகளிடையே இருந்த பிரச்சனைகள் விலகி வர வேண்டிய லாபங்கள் வந்து சேரும். தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 15.05.2014 அதிகாலை 01.16 மணி முதல் 17.05.2014 அதிகாலை 05.27 மணி வரை.
ஜீன்
எந்த இடையூறுகளையும் பொறுமையோடு தாங்கும் உள்ளம் கொண்ட உங்களுக்கு 6&இல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், மாத பிற் பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் ஒரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடுகளால் லாபங்களைப் பெற முடியும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. 13&ஆம் தேதி முதல் குரு 4&இல் சஞ்சரிக்க விருப்பதாலும் பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமலிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியுடன் செயல்பட முடியும். 21&ஆம் தேதி முதல் ராகு 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நற்பலனை உண்டாகும். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 11.06.2014 காலை 09.13 மணி முதல் 13.06.2014 மதியம் 01.35 மணி வரை.
ஜீலை
அகங்கார குணமும், வாக்கு சாதுர்யமும் கொண்ட உங்களுக்கு இம் மாத முற்பாதி வரை சூரியன் 3&ஆம் வீட்டிலும், செவ்வாய் 6&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தைப் பெறுவீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை காணப்பட்டாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குரு 4&இல் சஞ்சரிப்பதால் சுக வாழ்வு சொகுசு வாழ்வில் பாதிப்புகள் ஏற்படுவதுடன், அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் ஏற்பட்டாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் செயல்படவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது மிகவும் நல்லது.
சந்திராஷ்டமம் 08.07.2014 இரவு 09.14 மணி முதல் 10.07.2014 இரவு 09.97 மணி வரை.
ஆகஸ்ட்
தைரியமும், அஞ்சா நெஞ்சமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4&ஆம் வீட்டில் சூரியனும் குருவும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் ஏற்பட்டாலும், ராகு பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் யாவும் விலகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போதும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 05.08.2014 காலை 01.09 மணி முதல் 07.08.2014 காலை 05.58 மணி வரை.
செப்டம்பர்
வசீகரமான உடலமைப்பு கொண்ட உங்களுக்கு இம்மாதம் 6&ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 6&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்பதால் விரோதிகளும் நண்பர்களாக செயல்படுவார்கள் பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். பொன் பொருள் சேரும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வதால் எதிலும் ஒற்றுமையுடன் செயல் படமுடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 01.09.2014 காலை 08.58 மணி முதல் 03.09.2014 மதியம் 01.54 மணி வரை மற்றும் 28.09.2014 மாலை 04.37 மணி முதல் 30.09.2014 இரவு 09.46 மணி வரை.
அக்டோபர்
சமயத்திற்கேற்றார் போல் வளைந்து கொடுக்கும் பண்பு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் ராகுவும் சூரியனும் சஞ்சரிப்பதால் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும் என்றாலும், சனி 7&லும், செவ்வாய் 9&லும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் எதிர்பார்த்த படி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதையும் சமாளிப்பீர்கள், முருகப்பெருமானை வழிபடுவதால் நற்பலன் கிட்டும்.
சந்திராஷ்டமம் 25.10.2014 இரவு 12.17 மணி முதல் 28.10.2014 காலை 05.42 மணி வரை..
நவம்பர்
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் செவிசாய்க்காத பண்பு கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 6&இல் ராகுவும், 9&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். 4&இல் குரு சஞ்சாரம் செய்வதால் பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. 7&ஆம் வீட்டில் சூரியனும், சனியும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்து செயல் படவும், தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 22.11.2014 காலை 08.05 மணி முதல் 24.11.2014 பகல் 01.41 மணி வரை.
டிசம்பர்
தாணுண்டு தன் காரியம் உண்டு என செயல்பட கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&ஆம் வீட்டில் ராகுவும், 10&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த வித எதிர்ப்புகளையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடியிருக்கும். ஜென்ம ராசிக்கு 8&இல் சூரியன் சஞ்சரிப்பதும், இம்மாதம் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தின் மூலம் சனி பகவான் 8&ஆம் வீட்டிற்கு மாறுதலாகி அஷ்டம சனி தொடங்கவிருப்பதும் சற்று சாதக மற்ற அமைப்பு என்பதால் எந்த வொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 19.12.2014 மதியம் 03.48 முதல் 21.12.2014 இரவு 09.42 மணி வரை.
அசுவனி
அசுவனி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி கேது பகவான் ஆவார். அதிகாரத்திற்கு பெயர் பெற்ற செவ்வாயின் ராசியில் பிறந்துவிருப்பதால் மிகவும் துணிவும் தைரியமும் உடன் பிறந்ததாக இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு எதிலும் சற்று ஏற்ற இறக்கமானப் பலன்களே உண்டாகும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல் படுவது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடப்பது, முன்கோபத்தை குறைப்பது, ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது போன்றவற்றின் மூலமும் அனுகூலப் பலனை அடைய முடியும். சுப காரியங்கள் தாமதப்படும்.
பரணி
பரணி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்த்திராதிபதி சுக்கிர பகவானாவார். சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் அழகாக உடை உடுத்துவது அணிகலன்களை அணிந்து கொள்வது போன்றவற்றில் ஈடுபாடு அதிகமிருக்கும். இந்த வருடத்தில் உங்களின் பொருளாதார நிலை சுமாராகத் தானிருக்கும் என்பதால் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உறவினர்கள் ஏதாவது பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும் நிங்கள் நிதானத்தைக் கடை பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய துணிவார்கள்.
கிருத்திகை 1ம் பாதம்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவானாவார். சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் எதையும் வெளிப்படையாக பேசும் குணமும், முன் கோபமும் அதிகமிருக்கும். இந்த வருடம் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல் பட்டால் மட்டுமே தேவையற்றப் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க முடியும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர் பார்த்த லாபத்தினை அடை சற்று தாமதம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் - 1,2,3,9,10,11,12
நிறம் - ஆழ் சிவப்பு
கிழமை - செவ்வாய்
கல் - பவளம்
திசை - தெற்கு
தெய்வம் - முருகன்
பரிகாரம்
மேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு தற்போது முயற்சி ஸ்தானமான 3இல் சஞ்சரிக்கும் குருபகவான் வரும் 13.6.2014 முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வதும், குரு ப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் நல்லது. இந்த ஆண்டு முழுவதும் 7இல் சனி சஞ்சரிப்பதால் சனிக்குரிய பரிகாரங்களை செய்வதும், ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. ராகுபகவான் 21.6.2014 வரை 7இல் சஞ்சரிப்பதால் துர்க்கை அம்மனை வழிபடுவது உத்தமம்.
புத்தாண்டு பலன் 2014 ரிஷபம்
ரிஷபம் கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் பிடிவாத குணமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு உங்களுக்கு ஒரு பொற்காலம் என்று கூறினால் அது மிகையாகாது. ஆண்டின் முற்பாதி வரை குரு தனஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். புத்திர வழியிலும் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சனியும் ராகுவும் 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொட்ட தெல்லாம் துலங்கும். தொழில் வியாபாரத்திலுள்ள எதிர்ப்புகள் விலகி ஓடும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். சிலருக்கு சொந்த வீடு, மனை, வண்டி வாகனங்கள் போன்றவற்றை வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். தொழில் வியாபாரத்திலும் புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், எதிர்பார்க்கும் உயர் பதவிகளும் கிடைக்கப் பெறும். 13.6.2014 முதல் குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 21.06.2014இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது 11ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எதிலும் வெற்றியையும் லாபத்தினையும் பெறுவீர்கள்.
தேக ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்படக் கூடிய ஆற்றலும் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களால் இருந்த மருத்துவ செலவுகள் மறையும். அனைவரும் உங்களிடம் அன்பாக நடத்தும் கொள்வதால் மனநிறைவும் மகிழ்ச்சியும் உண்டாகும். சுக வாழ்க்கை அமையும்.
குடும்ப பொருளாதார நிலை
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மணவாழ்க்கை சிறப்பாக அமையும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமையும், அன்யோன்யமும் அதிகரிக்கும். புத்திர பாக்கியமும் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்கி சேர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த சுப செய்தியும் உங்களுக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
கொடுக்கல் வாங்கல்
பண வரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை காண்பீர்கள். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். சிலருக்குள்ள கடன் பிரச்சனைகளும் தீர்வடையும். இது வரை இருந்து வந்த வம்பு வழக்குகளிலும் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். எதிர்பாராத தன வரவுகளாலும் பொருளாதார நிலை மேன்மையடையும். சேமிப்பும் பெருகும்.
தொழில் வியாபாரிகளுக்கு
பல பெரிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அனுகூலம் கிட்டும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளும் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தியை பெருக்க முடியும். புதிய கிளைகளையும் நிறுவி மேன்மையினை அடைவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதார நிலையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக் கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகளால் வேலை பளுவும் குறையும்.
அரசியல்வாதிகளுக்கு
பெயர் புகழ் உயரக் கூடிய காலமாகும். நினைத்ததை நிறைவேற்றக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். கட்சிப் பணிகளுக்காக சிறு சிறு வீண் செலவுகளை செய்ய வேண்டியிருந்தாலும் பொருளாதார நிலை உயர்வாகவே இருக்கும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெற்று விடுவீர்கள். புதிய நவீன முறைகளை பயன்படுத்தி விசைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடும். சொந்த பூமி மனை போன்றவற்றையும் வாங்குவீர்கள். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு
உடல் நிலை மிகவும் அற்புதமாக அமையும். அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக செயல் பட முடியும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். ஆடை ஆபரணம், குடும்பத்திற்கு தேவையான அதி நவீனப் பொருட்கள் போன்ற யாவும் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் கிட்டும். மகிழ்ச்சி நிலவும்.
படிப்பு
மாணவ மாணவிகள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிப் பரிசுகளை தட்டிக் செல்வீர்கள். சிலருக்கு உயர்கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.
ஸ்பெகுலேஷன்
லாட்டரி, ரேஸ், ஷேர் போன்றவற்றில் எளிதில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபங்களைப் பெற முடியும்.
ஜனவரி
இனிமையான சுபாவம் கொண்ட உங்களுக்கு, 2இல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதாலும், சூரியன் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும் பணவிஷயத்தில் கவனமுடன் செயல்படுவதும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவம் நல்லது. 6ஆம் வீட்டில் சனியும் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளை சமாளித்து அபிவிருத்தியைப் பெறுக்குவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். சிவபெருமானை வழிபடுவதால் நற்பலன் உண்டாகும்.
சந்திராஷ்டமம் 31.12.2013 மதியம் 01.22 மணி முதல் 02.01.2014 மதியம் 03.50 மணி வரை மற்றும் 27.01.2014 இரவு 09.32 மணி முதல் 29.01.2014 இரவு 12.04 மணி வரை
பிப்ரவரி
எல்லோரையும் வசியப்படுத்தக் கூடிய தோற்றம் கொண்ட உங்களுக்கு சனியும், ராகுவும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. புதன் 10&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரரீதியாக நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 24.02.2014 காலை 05.33 மணி முதல் 26.02.2014 காலை 08.08 மணி வரை.
மார்ச்
எளிதில் உணர்ச்சி வசப்படாத ஆற்றல் கொண்ட உங்களுக்கு 6&ஆம் வீட்டில் சனியும் ராகுவும், 10&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் மிகவும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை உண்டாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். தொழில் வியாபார ரீதியாக மேற்க் கொள்ளும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். இம்மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 23.03.2014 மதியம் 01.27 மணி முதல் 25.03.2014 மாலை 04.04 மணி வரை.
ஏப்ரல்
சுய நலமில்லாமல், தியாக மனப்பான்மையுடன் செயல்படும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் குருவும், 10&இல் சுக்கிரனும் 11&இல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக அமைவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயர்வுகளும் உண்டாகும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 19.04.2014 இரவு 09.21 மணி முதல் 21.04.2014 இரவு 12.07 மணி வரை.
மே
நேர்மையே குறிக்கோளாக கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் குருவும், 6&இல் சனி ராகுவும், சஞ்சரிப்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் திருமண சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 17.05.2014 அதிகாலை 05.27 மணி முதல் 19.05.2014 காலை 08.18 மணி வரை.
ஜீன்
சாந்தமும், சகிப்புத் தன்மையும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 2லும் ராகு 6&லும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்திலும் சிறப்பான லாபம் கிட்டும். இம்மாதம் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 3&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவுள்ளார். இதனால் பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல் படுவது நல்லது. 21&ஆம் தேதி ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் கேது பகவான் லாப ஸ்தானமான 11&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வாழ்வில் மேன்மையான பலன்களே உண்டாகும். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நற்பலன் உண்டாகும்.
சந்திராஷ்டமம் 13.06.2014 மதியம் 01.35 மணி முதல் 15.06.2014 மாலை 04.21 மணி வரை.
ஜீலை
தன்னம்பிக்கையும், அசட்டு தைரியமும் கொண்ட உங்களுக்கு ராசியாதிபதி சுக்கிரன் ஆட்சிப் பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்குப் பஞ்சம் ஏற்படாது. இம்மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டிலும், செவ்வாய் 6&ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலும் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபாடுத்தும் போது சிந்தித்து செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் நிம்மதியான நிலையே இருக்கும். கடன்கள் குறையும். சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 10.07.2014 இரவு 09.47 மணி முதல் 12.07.2014 இரவு 12.52 மணிவரை.
ஆகஸ்ட்
பிடிவாத குணமும், பிறருக்கு அடி பணியாத ஆற்றலும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியனும், 6&இல் செவ்வாயும் சனியும் சஞ்சாரம் செய்வதால் இம்மாதமும் நினைத்ததை சாதிப்பீர்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும், பூர்வீக சொத்துக்களாலும், புத்திர வழியிலும் சிறு சிறு நெருக்கடிகள் தோன்றினாலும் எதையும் சமாளிக்க கூடிய பலமும் வலிமையும் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 07.08.2014 காலை 05.58 மணி முதல் 09.08.2014 காலை 09.04 மணி வரை.
செப்டம்பர்
விரோதிகளை கண்டு பயப்படாத அஞ்சா நெஞ்சம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் செவ்வாய் சனி சஞ்சரிப்பதும் 11&இல் கேது சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் எடுக்கும் காரியங்களில் வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டி பொறாமைகள் விலகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்றப் பாராட்டுதல்கள் கிட்டும். கடன்கள் குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 03.09.2014 மதியம் 01.54 மணி முதல் 05.09.2014 இரவு 05.09 மணிவரை.
அக்டோபர்
முன் கோபமும், முரட்டுத் தனமும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 3&இல் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகளில் ஏற்ற இறக்கமானப் பலன்களை ஏற்படுத்தினாலும், 6&இல் சனியும், 11&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விடுவீர்கள். இது மட்டுமின்றி மாத பிற்பாதியில் சூரியனும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் தேவை. முருகனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 30.09.2014 இரவு 09.46 மணி முதல் 03.10.2014 அதிகாலை 01.10 மணி வரை.மற்றும் 28.10.2014 காலை 05.42 மணி முதல் 30.10.2014 காலை 09.15 மணி வரை.
நவம்பர்
சாமர்த்தியமும், சாதுர்யமும் கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 6&இல் சனி, சூரியனும் 11&இல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருக்கும். கொடுக்கல்&வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். 8&இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடம் பேச்சில் நிதானத்தை கடை பிடித்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். தேவையற்றப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. முருகப் பெருமனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 24.11.2014 பகல் 01.41 மணி முதல் 26.11.2014 மதியம் 05.24 மணி வரை.
டிசம்பர்
கஷ்ட நஷ்டங்களை தாங்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் சனியும், 9&இல் செவ்வாயும், 11&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்குப் பெருகும். எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகளும் தேவைக்கேற்றபடியிருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு 7&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இம்மாதம் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி ஜென்ம ராசிக்கு 7&இல் சஞ்சரிப்பதால் விருப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாகும். சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 21.12.2014 இரவு 09.42 மணி முதல் 24.12.2014 அதிகாலை 01.35 மணி வரை
கிருத்திகை 2,3,4ம் பாதங்கள்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சூரிய பகவான். இது ரிஷப ராசிக்குரிய நட்சத்திர 2,3,4&ம் பாதங்களாகிறது. இந்த நட்சத்திரம் இரண்டு ராசிக்குரியதாகிறது. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருக்கும். இந்த வருடம் உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கக் கூடியதொரு காலமாக இருக்கும். பொன்னும் பொருளும் சேரும். பொருளாதார நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும் என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது.
ரோகிணி
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களின் நட்சத்திராதிபதி சந்திர பகவானாவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் எதையும் எளிதில் கற்றுக் கொள்ளக் கூடிய ஆற்றல் உடையவராக இருப்பீர்கள். இந்த வருடம் உங்களுக்கு தொட்டது துலங்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சொந்த பூமி மனை போன்றவற்றை வாங்குவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறைவதோடு குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.
மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்
இந்த நட்சத்திராதிபதி செவ்வாய் பகவான் என்பதால் அசாத்திய துணிவும், யாருக்கும் பயப்படாத குணமும் இருக்கும். இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடுவதுடன் கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பொன் பொருள் சேரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் நடந்தும் கொள்ளவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு குறையும்.
அதிர்ஷ்டம் அளிப்பை
எண் 5,6,8,14,15,17,
நிறம் வெண்மை, நீலம்,
கிழமை வெள்ளி,சனி
கல் வைரம்,
திசை தென்கிழக்கு,
தெய்வம் விஷ்ணு, லட்சுமி
பரிகாரம்
ரிஷப ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13.06.2014 முதல் குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய விருப்பதால் வியாழக்கிழமை தோறும் குருவுக்கு பரிகாரம் செய்வது, குருப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது. 21.06.2014 முதல் சர்ப கிரகமான ராகு 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது, சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
புத்தாண்டு பலன் 2014மிதுனம்
மிதுனம் மிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள்
வசீகரமான கண்களும், சிறந்த பேச்சாற்றலும் எதிலும் சுறு சுறுப்பாக செயல்படக் கூடிய திறமையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகளும் உடல் நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகளும் உண்டாகும். இது மட்டுமின்றி சனியும் ராகுவும் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள், புத்திர வழியில் மனசஞ்சலங்கள் போன்றவற்றை எதிர் கொள்வீர்கள் என்றாலும் கேது லாபஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று எதையும் சமாளிப்பீர்கள். வரும் 13.06.2014 இல் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் 2&ஆம் வீட்டிற்கு மாறுதலாக விருப்பது நல்ல அமைப்பாகும். இதனால் உங்களுக்குள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன்&மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலமானப் பலன்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். வரும் 21.06.2014&இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 4லும் கேது 10லும் சஞ்சாரம் செய்யவிருப்பது ஒரளவுக்கு சுமாரான அமைப்பாகும். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் 6&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பது அற்புதமான அமைப்பு- என்பதால் நினைத்தது நிறைவேறும்.
தேக ஆரோக்கியம்
உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள், சற்று மந்த நிலை, கைகால் அசதி போன்றவை ஏற்படும். அஜீரண கோளாறுகளும் உண்டாகும் என்றாலும் பெரிய அளவில் எந்த வித மருத்துவ செலவுகளும் ஏற்படாது. உடனே சரியாக அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
குடும்பம் பொருளாதார நிலை
இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள், திருமணத் தடைகள் உண்டாகும் என்றாலும், ஆண்டின் பிற்பாதியில் குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை போன்றவற்றால் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய சொத்துக்கள் கிடைக்கும்.
கொடுக்கல் வாங்கல்
பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும், பிற்பாதியில் தாராள தன வரவுகள் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படும். நெருக்கடிகள் விலகும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் யாவற்றிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி கிட்டும். பெரிய முதலீடுகளையும் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
தொழில் வியாபாரிகளுக்கு
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிறு சிறு போட்டிகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றால் வரவேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போனாலும், ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் மேன்மைகளை அடைய முடியும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலங்கள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒற்றுமையுடனிருப்பார்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு
பணியில் சற்று வேலை பளு அதிகரிப்பதுடன், எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்க்கும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதல் மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் பணியினை தற்போது பயன்படுத்தி கொள்வது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு
கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவுகள் செய்ய வேண்டியிருந்தாலும், கௌரவம் புகழ் யாவும் சிறப்பாக இருக்கும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி மக்களின் ஆதரவையும் பெறுவீர்கள். பண வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு
பயிர் விளைச்சல் ஒரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரை காப்பாற்ற அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப் பெற்று அனைத்தையும் சரி செய்ய முடியும். புதிய பூமி மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். தொழிலாளர்களின் உதவியும் கிடைக்கும்.
பெண்களுக்கு
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. ஆண்டின் முற்பாதிவரை பணவரவுகளில் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும், பிற்பாதியில் தாராள தன வரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் குடியேறும். திருமண வயதை அடைந்தவர்களுக்கும் நல்ல வரன்கள் தேடி வரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.
படிப்பு
கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல் பட்டால் அடைய நினைத்த மதிப்பெண்களை அடைந்து விட முடியும். கல்விக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். அரசு வழியில் ஆதரவுகளும் உண்டாகும். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும்.
ஸ்பெகுலேஷன்
இந்த ஆண்டின் முற்பாதி வரை லாட்டரி, ரேஸ்,ஷேர், போன்றவற்றில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். பிற்பாதியில் எதிலும் லாபத்தை அடையக் கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.
ஜனவரி
கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கும் உங்களுக்கு இம்மாதம் ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாயும் 7&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். லாபஸ்தானமான 11&இல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, தேவையற்றப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 7&இல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்&மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். பொது நலக் காரியங்களில் ஈடுபடக் கூடிய வாய்ப்பு, பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். இம் மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 02.01.2014 மதியம் 03.50 மணி முதல் 04.01.2014 மாலை 06.18 மணி வரை
மற்றும் 29.01.2014 இரவு 12.04 மணி முதல் 01.02.2014 அதிகாலை 02.28 மணி வரை
பிப்ரவரி
ஜென்ம ராசியில் குருவும், 4&இல் செவ்வாயும், 8&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானமுடன் செயல் படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் டென்ஷன்களை சந்திப்பீர்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக் கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்&வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். இம்மாதம் சிவ பெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 26.02.2014 காலை 08.08 மணி முதல் 28.02.2014 காலை 10.29 மணி வரை
மார்ச்
தந்திரமாக எதையும் சாதிக்க கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு இம்மாதம் பாக்கிய ஸ்தானத்தில் சூரியனும், லாப ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து ஒரளவுக்கு விடுபடுவீர்கள். பணவரவுகள் தேவைக் கேற்றபடி இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களும், புத்திரர்களால் மனசஞ்சலங்களும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 25.03.2014 மாலை 04.04 மணி முதல் 27.03.2014 இரவு 06.26 மணி வரை.
ஏப்ரல்
உயரமான தேகமும், மெலிந்த உடலமைப்பும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 10&இல் சூரியனும், 11&இல் கேதுவும் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். பணம் கொடுக்கல்&வாங்கலில் கவனமுடனிருப்பது நல்லது. திருமண சுப காரியங்களில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல் பட்டால் வீண் விரயங்களை குறைக்கலாம். இம்மாதம் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவது நல்லது.
சந்திராஷ்டமம் 21.04.2014 இரவு 12.07 மணி முதல் 24.04.2014 அதிகாலை 02.26 மணி வரை.
மே
பிறரை நையாண்டி செய்வதில் வல்லவரான உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 10&இல் சுக்கிரனும், 11&இல் சூரியனும் புதனும் சஞ்சாரம் செய்வதால் தாராள தன வரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கணவன்&மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகள் கிட்டும். இம்மாதம் தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 19.05.2014 காலை 08.16 மணி முதல் 21.05.2014 காலை 10.35 மணி வரை
ஜீன்
யாருக்கும் அடிபணியாத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் செவ்வாயும் 12&இல் சூரியனும் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் வரும் 13&ஆம் தேதி ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு பகவான் தனஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் பணவிஷயங்களிலிருந்த நெருக்கடிகள் யாவும் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். குடும்பத்தில் சுப காரியங்கள் கை கூடும். இம்மாதம் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் இது வரை 5,11&இல் சஞ்சரித்த ராகு கேது, மாறுதலாகி 4&இல் ராகுவும் 10&இல் கேதுவுமாக சஞ்சரிக்க விருப்பதும் குறிப்பிடத் தக்கதாகும். ஆஞ்ச நேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் 15.06.2014 மதியம் 04.21 மணி முதல் 17.06.2014 மாலை 06.51 மணி வரை.
ஜீலை
நல்ல அறிவும் சாமர்த்தியமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உஷ்ண சம்மந்தப்பட்ட ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும், உங்கள் ராசியாதிபதி புதன் ஆட்சிப் பெற்று அமைந்திருப்பதாலும், குரு 2&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் நினைத்ததெல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கை கூடும். கொடுக்கல்&வாங்கலிருந்தப் பிரச்சனைகள் விலகி கொடுத்த கடன்களும் வசூலாகும். தொழில் வியாபாரத்திலும் லாபம் பெருகும். போட்டி பொறாமைகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். வேலை பளு குறையும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 12.07.2014 இரவு 12.52 மணி முதல் 14.07.2014 இரவு 03.13 மணி வரை.
ஆகஸ்ட்
வசீகரமான கண்களைக் கொண்ட உங்களுக்கு தன ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்த்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். கணவன் &மனைவியிடையே ஒற்றுமை நிலவும். சொந்த பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும் என்றாலும் சற்று சிந்தித்து செயல் படவும், பயணங்களின் போது கவனமுடனிருப்பது, வேகத்தை குறைப்பது நல்லது. மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். சிலருக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் யோகமும், பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். துர்கை அம்மனை வழிபடவும்.
சந்திராஷ்டமம் 09.08.2014 காலை 09.04 மணி முதல் 11.08.2014 காலை 11.29 மணி வரை.
செப்டம்பர்
வெளி வட்டாரங்களில் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடிய பண்பு கொண்ட உங்களுக்கு, ஜென்ம ராசிக்கு 2&இல் குருவும், 3&இல் சூரியனும், 6&இல் செவ்வாயும் சஞ்சரிப்பதால் தொட்ட தெல்லாம் துலங்கும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் இனிமையானப் பலன்களைப் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்து வந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பமும் நிறைவேறும். வேலை பளு குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 05.09.2014 இரவு 05.09 மணி முதல் 07.09.2014 இரவு 07.35 மணி வரை.
அக்டோபர்
பிறரை எளிதில் வசப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு தனஸ்தானத்தில் குருவும் மாத முற்பாதி வரை செவ்வாய் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எந்த வித பிரச்சனைகளையும் எதிர் கொள்ளக் கூடிய வலிமையும் வல்லமையும் கூடும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். பொருளாதார நிலையில் நல்ல மேம்பாடுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலில் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உடன் பணி புரிபவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். இம்மாதம் சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.
சந்திராஷ்டமம் 03.10.2014 அதிகாலை 01.10 மணி முதல் 05.10.2013 காலை 03.39 மணி வரை.
நவம்பர்
தர்ம குணமும், தெய்வ பக்தியும் கொண்ட உங்களுக்கு 2&இல் குரு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமும், சுப காரியங்கள் கை கூடக் கூடிய அமைப்பும் உண்டாகும். மாத பிற்பாதியில் சூரியனும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகும். பொன் பொருள் சேரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். அசையும் அசையா சொத்துக்கள் சேரும். கடன்கள் யாவும் குறையும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 30.10.2014 காலை 09.15 மணி முதல் 01.11.2014 பகல் 11.48 மணி வரை.மற்றும் 26.11.2014 மாலை 05.24 மணி முதல் 28.11.2014 இரவு 07.59 மணி வரை.
டிசம்பர்
ஆடம்பரமாக செலவு செய்வதில் அலாதிப்பிரியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் குரு, 6&இல் சூரியன், 10&இல் கேது சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் மேன்மையடையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கொடுக்கல்&வாங்கலில் லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உற்றார் உறவினர்களிடையே தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கும். இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் சனி 6&இல் சஞ்சரிக்கும் விருப்பதால் வெற்றி மேல் வெற்றி கிட்டும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் 23.12.2014 இரவு 01.35 மணி முதல் 26.12.2014 அதிகாலை 04.18 மணி வரை.
மிருகசீரிஷம் 3,4ம் பாதங்கள்
ரத்த காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் எப்பொழுதும் பரபரப்பாக செயல்படக் கூடிய ஆற்றல் இருக்கும். இந்த வருடத்தில் தொடக்கத்தில் சிறு சிறு பிரச்சனைகள், மறைமுக எதிர்ப்புகள் போன்றவற்றை சந்தித்தாலும், ஆண்டின் பிற்பாதியில் எல்லா வகையிலும் மேன்மைகள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் லாபமளிக்கும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும்.
திருவாதிரை
சர்ப கிரகமான ராகுவின் நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் முன்கோபமும், முரட்டுத்தனமும் இயல்பிலேயே இருக்கும். இந்த ஆண்டின் முற்பாதி வரை சோதனைகளும் வேதனைகளும் ஏற்பட்டாலும், ஆண்டின் பிற்பாதியில் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கிட்டும். ஆடை ஆபரணம் சேரும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். செய்யும் தொழில் வியாபாரத்தை விருத்தி செய்ய இயலும். பயணங்களின் போது சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களின் பெயர் புகழ் உயரும். கடன்கள் குறையும்.
புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்
குருவின் நட்சத்திரத்தில் பிறந்துள்ளதால் நல்ல வாக்கு வன்மையும் நன்றி மறவாத குணமும் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கமானது ஏற்ற இறக்கமானப் பலன்களைக் கொடுக்கும். பணவரவுகளில் நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், மேன்மைகள் யாவும் கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத்தின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்கள் யாவும் தடை விலகி கைகூடும். கொடுக்கல்&வாங்கல் லாபமளிக்கும். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். பெரிய மனிதர்களின் நட்புக்களால் நற்பலன்கள் உண்டாகும்.
அதிர்ஷடம் அளிப்பை
எண் 5,6,8,14,15,17
நிறம் பச்சை, வெள்ளை
கிழமை புதன், வெள்ளி
கல் மரகதம்
திசை வடக்கு
தெய்வம் விஷ்ணு
பரிகாரம்
மிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு 13.06.2014 வரை குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப் ப்ரீதி தட்சிணா மூர்த்தியை வழிபாடு செய்வது கொண்டக்கடலை மாலை சாற்றுவது நல்லது. சனி 5 இல் சஞ்சரிப்பதால் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடவும். 21.6.2014 வரை ராகு 5இல் சஞ்சரிப்பதால் துர்கை அம்மனை ராகு காலங்களில் வழிபடுவது நல்லது.